எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" |
1954-ல் மகாராஜபுரம் சந்தானத்தால் தொடங்கப்பட்டது பழமை வாய்ந்த ஸ்ரீகிருஷ்ண கான சபா. கிட்டத்தட்ட 60 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த கட்டடம். இசை, நாட்டியம் ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தொடங்கப்பட்டு, அதன்படி பாரம்பரியமாக இங்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1974-ல் பத்மா சுப்ரமணியனுக்கு முதன்முதலில் இந்த சபா தான் விருது வழங்கி சிறப்பித்தது. 1989-ல் முதன் முதலில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சியும் இங்கு தான் நடைபெற்றது. அன்று முதல் ஷோபனாவிற்கும், கிருஷ்ண கான சபாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் சபாவில் சில மாற்றங்கள் செய்து புதிய கட்டடம் கடட நிதி கோரி இருந்தனர் சபா குழுவினர். அதன்படி சபாவின் புதிய கட்டடத்திற்காக வருகிற கோகுல அஷ்டமி அன்று நடைபெறும் தனது கிருஷ்ணா நாட்டிய நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கட்டடத்தின் வளர்ச்சிக்காக கொடுக்க இருக்கிறார். ஷோபனாவின் இந்த முடிவு இயல் இசை நாடக கலைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல புகழை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.