Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீகிருஷ்ணா கான சபாவிற்கு ஷோபனா நிதியுதவி!!

06 ஆக, 2012 - 04:47 IST
எழுத்தின் அளவு:

1954-ல் மகாராஜபுரம் சந்தானத்தால் தொடங்கப்பட்டது பழமை வாய்ந்த ஸ்ரீகிருஷ்ண கான சபா. கிட்டத்தட்ட 60 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த கட்டடம். இசை, நாட்டியம் ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தொடங்கப்பட்டு, அதன்படி பாரம்பரியமாக இங்கு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1974-ல் பத்மா சுப்ரமணியனுக்கு முதன்முதலில் இந்த சபா தான் விருது வழங்கி சிறப்பித்தது. 1989-ல் முதன் முதலில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சியும் இங்கு தான் நடைபெற்றது. அன்று முதல் ஷோபனாவிற்கும், கிருஷ்ண கான சபாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சபாவில் சில மாற்றங்கள் செய்து புதிய கட்டடம் கடட நிதி கோரி இருந்தனர் சபா குழுவினர். அதன்படி சபாவின் புதிய கட்டடத்திற்காக வருகிற கோகுல அஷ்டமி அன்று நடைபெறும் தனது கிருஷ்ணா நாட்டிய நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கட்டடத்தின் வளர்ச்சிக்காக கொடுக்க இருக்கிறார். ஷோபனாவின் இந்த முடிவு இயல் இசை நாடக கலைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல புகழை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)