புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
டைரக்டர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதி பகவன் படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் ஹீரோ ஜெயம் ரவி நடித்துள்ளார். ஆரம்பத்தில் பல பிரச்னைகளை சந்தித்த ஆதி பகவன் படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக இந்த படப்பிடிப்பு குழு தற்போது தாய்லாந்து சென்றுள்ளது. படத்தில் ஜெயம் ரவி சி.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன் வெளிநாடு சென்று, அங்கு நடக்கும் குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் ஜெயம் ரவி நடிப்பதற்கு பதிலாக டூப் போடலாம் என்று டைரக்டர் அமீர் யோசித்துள்ளார். ஆனால், அதை நிராகரித்த ஜெயம் ரவி, தானே அக்காட்சியில் டூப் போடாமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதன்பிறகு ஜெயம் ரவியை வைத்தே அந்த காட்சியை எடுத்து முடித்தாராம் இயக்குனர். இந்தக் காட்சி பிரமாதமாக வந்திருப்பதாக பட யூனிட்டே ஜெயம் ரவியை பாராட்டியுள்ளது.