ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தவம். புதுமுகம் வசி என்பவர் தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், சிங்கம் புலி, சந்தான பாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, செங்கல் ராவ், அர்ச்சனா சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆனந்த், சூரியன் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். படம் பற்றி அவர்கள் கூறியதாவது:
கதையின் நாயகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் மகனின் திருமணத்திற்காக 7 நாள் சுற்றுலா பயணமாக காரைக்குடி வருகிறாள். கதையின் நாயகன் காரைக்குடியில் ஏ டூ இசட் என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும், டூரிஸ்ட் கைடாகவும் இருக்கிறார். ஏழை விவசாயிகளின் வறுமையும் போக்க போராடும் நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருக்கிறார். கதாநாயகன், கதாநாயகி, நடேசன் வாத்தியார் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.
வேர்வை, உழைப்பு, கண்ணீர், அதனால் ஏற்படும் இரத்தம் மற்றும் காதலால் பின்னப்பட்டிருக்கிறது படத்தின் திரைக்கதை. விவசாயத்தின் இன்றைய நிலயையும், விவசாயிகளின் வலியையும் பேசுகிற படம். படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது, பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்கள்.