ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தவம். புதுமுகம் வசி என்பவர் தயாரித்து, நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் போஸ் வெங்கட், சிங்கம் புலி, சந்தான பாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, செங்கல் ராவ், அர்ச்சனா சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆனந்த், சூரியன் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள். படம் பற்றி அவர்கள் கூறியதாவது:
கதையின் நாயகி தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் மகனின் திருமணத்திற்காக 7 நாள் சுற்றுலா பயணமாக காரைக்குடி வருகிறாள். கதையின் நாயகன் காரைக்குடியில் ஏ டூ இசட் என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும், டூரிஸ்ட் கைடாகவும் இருக்கிறார். ஏழை விவசாயிகளின் வறுமையும் போக்க போராடும் நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் சீமான் நடித்திருக்கிறார். கதாநாயகன், கதாநாயகி, நடேசன் வாத்தியார் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.
வேர்வை, உழைப்பு, கண்ணீர், அதனால் ஏற்படும் இரத்தம் மற்றும் காதலால் பின்னப்பட்டிருக்கிறது படத்தின் திரைக்கதை. விவசாயத்தின் இன்றைய நிலயையும், விவசாயிகளின் வலியையும் பேசுகிற படம். படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது, பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்கள்.