ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பல திரைப்பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில், இப்படம், கோவாவில் நடக்கும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது. கோவாவில் நவ., 20 முதல் 28-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. உலகெங்கிலும் சுமார் 200 படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் பரியேறும் பெருமாள் தேர்வாகி உள்ளது. இப்படத்துடன் பேரன்பு, டூ-லெட் மற்றும் பாரம் ஆகிய படங்களும் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.