நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் | ஹிருது ஹாருன் ஜோடியான சம்யுக்தா விஸ்வநாதன் | ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி |

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. பல திரைப்பிரபலங்கள் பாராட்டினர்.
இந்நிலையில், இப்படம், கோவாவில் நடக்கும் 49-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது. கோவாவில் நவ., 20 முதல் 28-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. உலகெங்கிலும் சுமார் 200 படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கின்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் பரியேறும் பெருமாள் தேர்வாகி உள்ளது. இப்படத்துடன் பேரன்பு, டூ-லெட் மற்றும் பாரம் ஆகிய படங்களும் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.




