Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

11 ஏப், 2012 - 04:43 IST
எழுத்தின் அளவு:

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார். தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரம் 13-ம் முதல் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் உதயநிதி, தற்போது புதிய படத்தில் நடிப்பதற்காக கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். சந்தானத்திற்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படப்படிப்பின் போது எனக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனக்கு காமிரா முன்பு நிற்பதும், வசனம் பேசுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படக்குழுவினர்தான் எனக்கு பெரிதும் உதவினார்கள், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)