மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

யோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க, சிறிது நேரம் ஒதுக்குவாரா என, நடிகர், பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், 53, டுவிட்டர் சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரிய தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி, யோகா, உடற்பயிற்சி என, மிகவும் பிசியாக உள்ளார். டில்லியில், முதல்வருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, பிரதமர் சிறிது நேரம் ஒதுக்க முடியாதா; இதன் மூலம், தன் கடமையை அவர் நிறைவேற்றலாமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அதிருப்தி தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹாவும், டில்லி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.




