காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
யோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க, சிறிது நேரம் ஒதுக்குவாரா என, நடிகர், பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், 53, டுவிட்டர் சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரிய தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி, யோகா, உடற்பயிற்சி என, மிகவும் பிசியாக உள்ளார். டில்லியில், முதல்வருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, பிரதமர் சிறிது நேரம் ஒதுக்க முடியாதா; இதன் மூலம், தன் கடமையை அவர் நிறைவேற்றலாமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அதிருப்தி தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹாவும், டில்லி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.