பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

போடா போடி படத்துக்குப் பிறகு வரலட்சுமியின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகவே இல்லை. பல ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நிறைய படங்கள் தேடி வருகின்றன.
சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என சுமார் 10 படங்களை கையில் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தேடிவரும் படங்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்புவதில்லையாம். நல்ல கேரக்டர் வந்தால் சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஓகே சொல்லிவிடுகிறாராம் வரலட்சுமி.
லேட்டஸ்ட்டாக அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் கதை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.