ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
போடா போடி படத்துக்குப் பிறகு வரலட்சுமியின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகவே இல்லை. பல ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நிறைய படங்கள் தேடி வருகின்றன.
சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என சுமார் 10 படங்களை கையில் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தேடிவரும் படங்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்புவதில்லையாம். நல்ல கேரக்டர் வந்தால் சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஓகே சொல்லிவிடுகிறாராம் வரலட்சுமி.
லேட்டஸ்ட்டாக அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் கதை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.