ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் |

போடா போடி படத்துக்குப் பிறகு வரலட்சுமியின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகவே இல்லை. பல ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நிறைய படங்கள் தேடி வருகின்றன.
சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என சுமார் 10 படங்களை கையில் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தேடிவரும் படங்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்புவதில்லையாம். நல்ல கேரக்டர் வந்தால் சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஓகே சொல்லிவிடுகிறாராம் வரலட்சுமி.
லேட்டஸ்ட்டாக அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் கதை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.




