2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

போடா போடி படத்துக்குப் பிறகு வரலட்சுமியின் சினிமா கேரியர் டேக் ஆப் ஆகவே இல்லை. பல ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்தவருக்கு இப்போது நிறைய படங்கள் தேடி வருகின்றன.
சண்டக்கோழி-2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2 என சுமார் 10 படங்களை கையில் வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
தேடிவரும் படங்களை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்புவதில்லையாம். நல்ல கேரக்டர் வந்தால் சம்பளத்தை பெரிதாக கருதாமல் ஓகே சொல்லிவிடுகிறாராம் வரலட்சுமி.
லேட்டஸ்ட்டாக அறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்கும் 'வெல்வெட் நகரம்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைகாலஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் கதை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளராக நடிக்கிறார்.