விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தி அரசியலுக்கு உள்ளது. அரசியலை அனைவரும் தெரிந்து கொண்டு அதனை கண்காணிக்க வேண்டும். மக்களாட்சியை மாணவர்கள் தான் மலர வைக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியல் பயணத்தை துவங்கியுள்ளேன். மகளிர் தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். மாணவர் சமுதாயத்தோடு இணைந்து மீண்டும் கற்றுகொள்ள விரும்புகிறேன். மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை அதிகம் வரவேற்கிறேன்.
மய்யம் என்பது எது சரி என தெரிந்து அந்த பக்கம் செல்வது. மய்யத்தில் இருப்பது என்பது நேர்மையாக இருப்பதற்கு சமம். வீட்டு சாவி கொடுக்கும் பெண்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் ஏன் தயங்க வேண்டும். நான் பெண்களை கொண்டாடுகிறவன். பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். இதனை பல காலமாக முன்னோர்கள் சொல்லி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போஸ்டர் வேண்டாம்
இதனிடையே, மகளிர் தினத்தையொட்டி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது. இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில், "இன்று மாலை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்" என கூறியுள்ளார்.