Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு

31 டிச, 2017 - 01:57 IST
எழுத்தின் அளவு:
Case-filed-against-vijay-father-s.a.chandra-sekar

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை லஞ்சம் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இது தொடர்பாக இந்து அமைப்பு சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவித்தது. இந்நிலையில், பிற மதத்தினரின் உணர்வுகளை, உள்நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது ஐபிசி 295 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)