சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை லஞ்சம் என சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இது தொடர்பாக இந்து அமைப்பு சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவித்தது. இந்நிலையில், பிற மதத்தினரின் உணர்வுகளை, உள்நோக்கத்துடன் புண்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது ஐபிசி 295 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.