சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
1991ல் மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. ரஜினி-மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்டான தளபதி படத்திற்கு பிறகு ரஜினியும், மம்மூட்டியும் இணைந்து நடிக்கவில்லை.
ஆனால் 26 வருடங்களுக்குப்பிறகு தற்போது அவர்கள் இருவரும் ஒரு மராத்தி படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தீபக் பாவேஷ் என்பவர் இயக்கும் அந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஆக, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரஜினி, தனது தாய்மொழியான மராத்தியில் இந்த படம் மூலம்தான் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.