புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
குற்றம் 23 படத்தைத் தொடர்ந்து, அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களாகவே தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன்.
முழுக்க பெண்ணை மையப்படுத்திய அக்கதையில் முன்னணி கதாநாயகி நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, ஜோதிகா, அனுஷ்கா, மஞ்சு வாரியார் ஆகியோரிடம் கதை சென்னார். மற்ற இருவரும் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், மஞ்சு வாரியார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை அறிவழகன் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மஞ்சுவாரியர் நடிப்பது உறுதி என்றே படத்துறையில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் ஒருவேளை நயன்தாராவுக்கு பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் அவருக்கு கதை சொன்னார் அறிவழகன்.
கதை பிடித்துப்போக, அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர் ஓகே சொல்ல, அறிவழகன் இயக்கவுள்ள சைக்காலஜி த்ரில்லர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் நயன்தாரா.
இப்படத்தை எஸ்.பி சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்து நயன்தாரா உடன் நேற்று அக்ரிமெண்ட் போட்டுவிட்டனர்.