சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷால், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, விநய், கே.பாக்யராஜ், சிம்ரன் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி பேட்டியளித்த விஷால் நான் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது என்று கூறினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன் பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள், அதைப்போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன், துப்பறியும் சம்பந்தமான படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் நடித்த துப்பறியும் படங்கள், தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இது இருக்கும். நல்ல கதையம்சம் கொண்ட படத்தை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் விருந்தாக இருக்கும். என்னுடைய சினிமா கேரியரில் நான் நடித்த முழு நீள ஸ்டைலிஷான படம்.
துப்பறிவாளனுக்குப் பிறகு இன்னும் புதுமையான நல்ல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அடுத்து இரும்புத்திரை, சண்டைகோழி-2, டெம்பர் ரீமேக் என்று வித்யாசமான படங்கள் வரவுள்ளது. நான் இயக்குநர் மிஷ்கினை விலைக்கு வாங்கிவிட்டேன். அவர் அடுத்து இயக்கும் படம் என் கம்பெனிக்குத் தான். அவர் தொடர்ந்து என்னை வைத்து படங்கள் இயக்குவார்.
நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாத்தித்து கொள்வேன். இப்போது நான் கோடிகளை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் திரையுலகமே இருந்திருக்காது. திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள். இரண்டு படம் தள்ளிப்போனது எனக்கு லாஸ் தான். நான் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பேன். ஆனால் திரையுலகம் தான் இப்போது எனக்கு மிகவும் முக்கியம் என்றார் விஷால்.