சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கும்கி படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமான விக்ரம் பிரபு, நெருப்புடா படம் மூலம், வெற்றிகரமாக, 10 படங்களில் நடித்து முடித்து விட்டார். இடையில் ஏற்பட்ட சறுக்கல்களை இந்த படம் சரி செய்யும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார், அவர். இதில், தீயணைப்பு வீரராக நடிக்கிறார்.
தீ விபத்து தொடர்பான காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னை, கண்ணகி நகரில், 150 குடிசைகள் அமைத்து, படமாக்கப்பட்டுள்ளது. இதில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, டாக்டராக, நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
'மனித உணர்வுகளையும், உயிரின் வலிகளையும் காட்சிப்படுத்துவதே இந்த படத்தின் நோக்கம்' என்கிறது, படக்குழு. இதற்கிடையே, விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி ஜோடியின் கெமிஸ்ட்ரி செமத்தியாக, 'ஒர்க் அவுட்' ஆகியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இருவருமே காதல் காட்சிகளில் இயல்பாக நடித்துள்ளார்.