விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
தங்க மீன்கள் படத்திற்கு பிறகு ராம் இயக்கியுள்ள தரமணி படம் வருகிற 11ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் ஹீரோவாகவும், ஆண்ட்ரியா ஜோடியாகவும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி.
இவரது அறிமுகம் குறித்து ராம் கூறும்போது: தங்க மீன்கள் படத்தை வெளியிட முடியாத கஷ்டமான சூழ்நிலை இருந்தபோது எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்து படத்தை வெளியிட பெரும் துணையாக இருந்தவர் வசந்த் ரவியின் தந்தை. அவர் இல்லாவிட்டால் தங்க மீன்கள் படமே வெளிவந்திருக்காது. அவருக்கு நான் செய்யும் செஞ்சோற்று கடன் தீர்ப்பு தான் அவர் மகனை ஹீரோவாக்கியது. அதற்காக நான் கதையிலோ, கேரக்டர் தேர்விலோ சமரசம் செய்து கொள்ளவில்லை. நான் மனதில் நினைத்திருந்த கேரக்டருக்கு வசந்த் ரவி பொருத்தமாக இருந்ததால் அவரை நடிக்க வைத்தேன் என்றார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி வசந்த் ரவி கூறியதாவது: என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம் தரமணி. இயக்குனர் ராம், எனக்கு பல வருடங்களாக பழக்கம். தரமணி படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன்பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார்.
இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு கால் செண்டர் ஊழியராக நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். ராம் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைப்பதாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் வசந்த் ரவி.