ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மகள் வழி பேத்தி எஸ்.கமலாவிற்கும், வி.ஆர்.எம்.நாச்சியப்பன் என்ற செந்தில் நாதனுக்கும் சொந்த கிராமத்தில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், ஏவிஎம்.பாலசுப்பிரமணியம், திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆர்.எம்.விரப்பன், ஜெகத்ரட்ஷகன், ஏ.சி.சண்முகம், முன்னாள் மேயர்.ம.சுப்பிரமணியன், ஏ.சி.முத்தையா, நல்லிகுப்புசாமி, அபிராமி ராமநாதன், இசைஞானி இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு, கேயார், பிலிம் சேம்பர் தலைவர் எல்.சுரேஷ், முன்னாள் கல்யாண், செயலாளர் காட்ரகட்ரா பிரசாத், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, முத்தா வி.சினிவாசன், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் கே.பாக்கியராஜ், சிவகுமார், கார்த்தி, ராமராஜன், ராதிகா சரத்குமார், உள்பட பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவருடைய சகோதரர்கள் சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றார்கள்.