மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மகள் வழி பேத்தி எஸ்.கமலாவிற்கும், வி.ஆர்.எம்.நாச்சியப்பன் என்ற செந்தில் நாதனுக்கும் சொந்த கிராமத்தில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், ஏவிஎம்.பாலசுப்பிரமணியம், திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆர்.எம்.விரப்பன், ஜெகத்ரட்ஷகன், ஏ.சி.சண்முகம், முன்னாள் மேயர்.ம.சுப்பிரமணியன், ஏ.சி.முத்தையா, நல்லிகுப்புசாமி, அபிராமி ராமநாதன், இசைஞானி இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு, கேயார், பிலிம் சேம்பர் தலைவர் எல்.சுரேஷ், முன்னாள் கல்யாண், செயலாளர் காட்ரகட்ரா பிரசாத், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, முத்தா வி.சினிவாசன், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் கே.பாக்கியராஜ், சிவகுமார், கார்த்தி, ராமராஜன், ராதிகா சரத்குமார், உள்பட பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவருடைய சகோதரர்கள் சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றார்கள்.




