சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மகள் வழி பேத்தி எஸ்.கமலாவிற்கும், வி.ஆர்.எம்.நாச்சியப்பன் என்ற செந்தில் நாதனுக்கும் சொந்த கிராமத்தில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், ஏவிஎம்.பாலசுப்பிரமணியம், திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆர்.எம்.விரப்பன், ஜெகத்ரட்ஷகன், ஏ.சி.சண்முகம், முன்னாள் மேயர்.ம.சுப்பிரமணியன், ஏ.சி.முத்தையா, நல்லிகுப்புசாமி, அபிராமி ராமநாதன், இசைஞானி இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு, கேயார், பிலிம் சேம்பர் தலைவர் எல்.சுரேஷ், முன்னாள் கல்யாண், செயலாளர் காட்ரகட்ரா பிரசாத், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, முத்தா வி.சினிவாசன், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் கே.பாக்கியராஜ், சிவகுமார், கார்த்தி, ராமராஜன், ராதிகா சரத்குமார், உள்பட பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவருடைய சகோதரர்கள் சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வரவேற்றார்கள்.