நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
டிரான்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன், புனிதா ராஜன் தயாரித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். இஷாக் என்பவர் இயக்கி உள்ளார். ஆரி, ஆஸ்னா ஜவேரி, லதா, சித்தாரா, காளி வெங்கட், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தடைகேட்டு நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய தந்தை நாகேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் சென்னை டி.நகரில் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு தியேட்டரை கட்டி நடத்தினார். தற்போது அந்த தியேட்டரின் பெயரிலேயே நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்த பெயரை வைப்பதற்கு படத்தின் சார்பில் யாரும் எங்கள் குடும்பத்திடம் அனுமதி பெறவில்லை.
எனது தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும். எங்கள் அனுமதி இன்றி நாகேஷ் திரையரங்கம் என்று தலைப்பு வைத்ததற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.