தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் | பன் பட்டர் ஜாமுக்காக ராஜு ஜெயமோகனை பாராட்டிய விஜய் |
1972ம் ஆண்டு வெளிவந்த படம் காசேதான் கடவுளடா. போலி சாமியார்களிடம் சிக்கி மக்கள் ஏமாறுகிற கதையை கொண்ட படம். சித்ராலயா கோபு எழுதி, இயக்கினார். முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நாடக வடிவமாக்கி அதனை இன்றைக்குள்ள சூழ்நிலைக்கேற்றவாறு சில மாறுதல்கள் செய்து அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேங்காய் சீனிவாசன் நடித்த சாமியார் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். தமிழ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது.
நேற்று இந்த நாடகம் 100 மேடை கண்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் 100 வது காட்சி நடந்தது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், தம்பி ராமய்யா, இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நாடகத்தை ரசித்து பார்த்ததுடன் நாடக கலைஞர்களை கவுரவித்து பாராட்டி பேசினார்கள். ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கு முன் நடத்திய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகமும் 100 மேடைகள் கண்டது குறிப்பிடத்தக்கது.