முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
1972ம் ஆண்டு வெளிவந்த படம் காசேதான் கடவுளடா. போலி சாமியார்களிடம் சிக்கி மக்கள் ஏமாறுகிற கதையை கொண்ட படம். சித்ராலயா கோபு எழுதி, இயக்கினார். முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நாடக வடிவமாக்கி அதனை இன்றைக்குள்ள சூழ்நிலைக்கேற்றவாறு சில மாறுதல்கள் செய்து அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேங்காய் சீனிவாசன் நடித்த சாமியார் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். தமிழ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது.
நேற்று இந்த நாடகம் 100 மேடை கண்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் 100 வது காட்சி நடந்தது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், தம்பி ராமய்யா, இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நாடகத்தை ரசித்து பார்த்ததுடன் நாடக கலைஞர்களை கவுரவித்து பாராட்டி பேசினார்கள். ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கு முன் நடத்திய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகமும் 100 மேடைகள் கண்டது குறிப்பிடத்தக்கது.