சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
1972ம் ஆண்டு வெளிவந்த படம் காசேதான் கடவுளடா. போலி சாமியார்களிடம் சிக்கி மக்கள் ஏமாறுகிற கதையை கொண்ட படம். சித்ராலயா கோபு எழுதி, இயக்கினார். முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நாடக வடிவமாக்கி அதனை இன்றைக்குள்ள சூழ்நிலைக்கேற்றவாறு சில மாறுதல்கள் செய்து அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேங்காய் சீனிவாசன் நடித்த சாமியார் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். தமிழ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது.
நேற்று இந்த நாடகம் 100 மேடை கண்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் 100 வது காட்சி நடந்தது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், தம்பி ராமய்யா, இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நாடகத்தை ரசித்து பார்த்ததுடன் நாடக கலைஞர்களை கவுரவித்து பாராட்டி பேசினார்கள். ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கு முன் நடத்திய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகமும் 100 மேடைகள் கண்டது குறிப்பிடத்தக்கது.