சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜீ தமிழ் சேனலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சி அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் கலாய்த்து வேறொரு சேனலில் லைவ் ஷோ நடத்தினர். பின்னர் சினிமாக்களிலும் அவரை கிண்டல் செய்து பாடல் மற்றும் காட்சிகள் வைத்தனர். மேலும், சில மாஜி ஹீரோயின்கள் இப்படியொரு நிகழ்ச்சி தேவைதானா? என்று விமர்சனம் செய்தனர். இருப்பினும், எந்த விமர்சனங்களுக்கும் செவி கொடுக்காமல் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இந்நிலையில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியைப்பற்றி தொடரும் விமர்சனங்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், ஒரு பிரச்சினை என்று வரும்போது நல்ல கெட்டதை ஆராய்ந்து அந்த சூழுலுக்கேற்ற முடிவை எடுக்கிறோம். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் சென்று முறையிட சொல்வதெல்லாம் உண்மையை விட வேறு நல்ல நடைமுறை வரும்போது இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொள்வோம். அதனால் எங்களைப் பற்றி தொடர்ந்து குறை சொல்வதை விட்டு விட்டு, இந்த பிரச்சினைகளுக்காக வேறொரு தளத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீங்கள் உருவாக்கினால் அப்போது இந்த சமூகத்துக்கு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தேவைப்படாது என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.