'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ஒரு மனிதனின் கதை. எழுத்தாளர் சிவசங்கரியின் கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரகுவரன் இந்த தொடரின் மூலம் புகழ்பெற்றுத்தான் பெரிய நடிகர் ஆனார். இது மதுவுக்கு அடிமையான ஒருவனின் கதை. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை சினிமாவாக தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்தது. காரணம் மது அரக்கன் அப்போதும் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு மனிதனின் கதை தொடர் தியாகு என்ற பெயரில் சினிமாவானது. எஸ்.பி.முத்துராமன் சம்பளம் எதுவும் பெறாமல் இயக்கிக் கொடுத்தார். ரகுவரன் நடித்தார். விருதுக்கென எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. அன்று முதல்வராக இருந்த கருணாநிதி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு ஒரு படம் எடுக்க முடிவு செய்திருந்தார். ஏவிஎம் எடுத்துள்ள தியாகு படம் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி மூலம் கேள்விப்பட்டு அதனை வாங்கி தியேட்டரில் திரையிட முடிவு செய்தார்.
மதுவின் கொடுமையை விளக்கும் இந்தப் படத்திற்கு பணம் தேவையில்லை மக்களுக்கு சென்று சேர்ந்தால் போதும் என்று பணம் வாங்காமலேயே அரசுக்கு படத்தை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம். அரசும் பல தியேட்டர்களில் படத்தை வெளியிட்டது. ஆனாலும் மக்கள் வந்து பார்க்கவில்லை. அது அப்படியே பெட்டிக்குள் போய்விட்டது. இன்றைக்கு மது அரக்கன் ஆட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போது அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனமோ, அல்லது யாராவது வாங்கியோ சின்னத்திரையில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும். ஒரு சிலராவது திருந்த வாய்ப்பிருக்கிறது.




