சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ஒரு மனிதனின் கதை. எழுத்தாளர் சிவசங்கரியின் கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரகுவரன் இந்த தொடரின் மூலம் புகழ்பெற்றுத்தான் பெரிய நடிகர் ஆனார். இது மதுவுக்கு அடிமையான ஒருவனின் கதை. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை சினிமாவாக தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்தது. காரணம் மது அரக்கன் அப்போதும் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு மனிதனின் கதை தொடர் தியாகு என்ற பெயரில் சினிமாவானது. எஸ்.பி.முத்துராமன் சம்பளம் எதுவும் பெறாமல் இயக்கிக் கொடுத்தார். ரகுவரன் நடித்தார். விருதுக்கென எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. அன்று முதல்வராக இருந்த கருணாநிதி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு ஒரு படம் எடுக்க முடிவு செய்திருந்தார். ஏவிஎம் எடுத்துள்ள தியாகு படம் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி மூலம் கேள்விப்பட்டு அதனை வாங்கி தியேட்டரில் திரையிட முடிவு செய்தார்.
மதுவின் கொடுமையை விளக்கும் இந்தப் படத்திற்கு பணம் தேவையில்லை மக்களுக்கு சென்று சேர்ந்தால் போதும் என்று பணம் வாங்காமலேயே அரசுக்கு படத்தை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம். அரசும் பல தியேட்டர்களில் படத்தை வெளியிட்டது. ஆனாலும் மக்கள் வந்து பார்க்கவில்லை. அது அப்படியே பெட்டிக்குள் போய்விட்டது. இன்றைக்கு மது அரக்கன் ஆட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போது அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனமோ, அல்லது யாராவது வாங்கியோ சின்னத்திரையில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும். ஒரு சிலராவது திருந்த வாய்ப்பிருக்கிறது.