புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
பெண் இயக்குனர்கள் என்றாலே சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலான கதைகளைத்தான் பெரும்பாலும் இயக்குவார்கள். ஆனால் டைரக்டர் சுதா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குனர். தனது முதல் படமான துரோகியை ஆக்சன் கதையில் இயக்கினார். ஸ்ரீகாந்த்-விஷ்ணு அந்த படத்தில் நடித்தார்கள்.
அதேபோல், மாதவன்-ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட கதையில் இயக்கினார். தமிழில் வெற்றி பெற்ற அந்த படத்தை தெலுங்கிலும் இயக்கி ஹிட் கொடுத்து விட்ட சுதா, தனது அடுத்த படவேலைகளை தொடங்கி விட்டார். அந்த படத்தையும் வழக்கம்போல் ஆக்சன் கதையில்தான் இயக்குகிறார். அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதாக கூறியுள்ள சுதா, அந்த நடிகர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுதாவின் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.