சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
என் தொழில் பற்றி எனது கணவருக்கு நன்றாக தெரியும்; அவரது அனுமதியுடன்தான் கவர்ச்சியாக நடிக்கிறேன், என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்வேதா மேனன். தமிழ், மலையாள படங்களில் கவர்ச்சி பாவையாக உலா வரும் நடிகை ஸ்வேதா மேனன் மிகவும் வித்தியாசமானவர். கவர்ச்சிகரமான ரோலில் நடிக்க அவர் சற்றும் தயங்குவதில்லை. இத்தனைக்கும் கடந்த ஜூன் மாதம்தான் இவருக்கு திருமணம் நடந்தது. ஆனாலும் இப்போதும் அவர் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை. நடிப்பு என வந்து விட்டால், இந்த வேடம், அந்த வேடம் என்று பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. எப்படியாக இருந்தாலும் நடிக்க வேண்டும். கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறே இல்லை. இதை என் கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். எனது முன்னேற்றத்தில் அவருக்கு நிறைய அக்கறை உண்டு. எனக்கு அவரால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்கிறார். இன்னும் சொல்லப்போனால் என் கணவரின் அனுமதியுடன்தான் நான் கவர்ச்சி கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.