சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட். திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டியவர். திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.
வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவையில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் .22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர். அவரின் பிறந்தநாளான ஏப்ரல் 18 ஐ ஆண்டுதோறும் திரையரங்கு தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை கமலா திரையரங்கில் நாளை காலை 8. மணிக்கு 2011ல்.தேசிய விருதுபெற்ற "வாகை சூடவா " திரைப்படத்தை திரையிட்டு, 10.00 மணியளவில் வாகை சூடவா படக்குழுவினரோடு இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பர்ஸ்ட் ஸ்டெப் பி.ஆர் சர்வீஸ், எப்.என் எண்டர்டெயின்மெண்ட், வில்லேஜ் தியேட்டர் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளன.