நிவின்பாலி அல்ல.. அது நான் தான்.. ; தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சின் ரகசியத்தை உடைத்த நடிகர் | 'மாமன்' படம் மூலம் வசனகர்த்தாவாக மாறிய ஈரோடு மகேஷ்i | ஆகஸ்ட்டில் துவங்கும் 'சார்பட்டா பரம்பரை 2' படப்பிடிப்பு | பிளாஷ்பேக்: புதுக்கோட்டை தந்த புதுமை நாயகன் ஏ வி எம் ராஜன் | அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் |
இயக்குனர் பாரதிராஜா, இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோரோடு சினிமாவுக்கு வந்தவர் அன்னக்கிளி செல்வராஜ். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு முன்பே வந்தவர் செல்வராஜ். இளையராஜாவும், பாரதிராஜாவும் இவரது அறையில் தங்கி இருந்துதான் வாய்ப்பு தேடினார்கள். அந்தக் காலத்திலேயே நீ இசை அமைப்பாளர், நீ இயக்குனர், நான் கதாசிரியர் என்று பிரித்துக் கொண்டனர்.
ஒரே நாளில் நான்கைந்து படத்துக்கு கதை தயார் செய்பவராக இருந்தார் செல்வராஜ். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய எங்கம்மா சபதம் தான் செல்வராஜ் சினிமாவுக்கு எழுதிய முதல் கதை. அதன் பிறகு அன்னக்கிளி, கிழக்கே போகும் ரெயில், கடலோர கவிதைகள், புதிய வார்ப்புகள், என பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியராக இருந்தார். பிற்காலத்தில் சாதனை படைத்த அலைபாயுதே, சின்னக்கவுண்டர், முதல் மரியாதை கதைகளும் செல்வராஜுடையது. இதுவரை 100 கதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.
கதாசிரியராக இருந்த செல்வராஜ் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு நீதானா அந்தக்குயில், அகல் விளக்கு, பகதிபுரம் ரெயில்வே கேட் உள்பட 18 படங்களை இயக்கினார். கதாசிரியராக வெற்றி பெற்ற செல்வராஜால் இயக்குனராக வெற்றி பெற முடியவில்லை. அன்னக்கிளி செல்வராஜ் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு அங்கம். இளையராஜா, பாரதிராஜா அளவிற்கு புகழ் பெறாவிட்டாலும் அவர்கள் அளவிற்கு தமிழ் சினிமாவிற்கு தன் பங்களிப்பைச் செய்தவர்.