சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு ஆர்.சி.சக்தி இயக்கிய படம் சிறை. ராஜேஷ், லட்சுமி நடித்திருந்தனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனோடு வாழ்க்கை நடத்தி ஏற்காத கணவன் கட்டிய தாலியை அறுத்தெறியும் பெண்ணின் கதை. புரட்சிகரமான இந்த கதையில் பாலியல் பலாத்காரம் செய்யும் அந்தோணியாக ராஜேசும், புரட்சிகர பெண்ணாக லட்சுமியும் நடித்திருந்தனர்.
படம் முடிந்ததும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. ஒரு பெண் தாலியை அறுத்து எரிவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அந்த கிளைமாக்ஸ் காட்சியை தூக்கி விட்டு அவள் கணவனோடு செல்வது அல்லது தற்கொலை செய்வது கொள்வது போன்றோ எடுத்தால் படத்தை வாங்குகிறோம் என்று விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர்களும் ஆர்.சி.சக்தியிடம் சென்று நாங்கள் போட்ட பணம் திரும்பி வரவேண்டும். கிளைமாக்ஸ்சை மாற்றுங்கள் என்றனர். அதற்கு ஆர்.சி.சக்தி. அந்த கிளைமாக்ஸ்தான் படத்திற்கு உயிர் நீங்கள் வேறு இயக்குனரை வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் படத்திலிருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் பலரையும் அழைத்து படத்தை பிரிவியூ ஷோவாக போட்டுக் காட்டி படத்தை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சினர். இப்படி 60 தடவை பிரிவியூ ஷோ போடப்பட்டது. ஆனாலும் யாரும் வாங்கவில்லை. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களே தங்கள் சொந்த பொறுப்பில் வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிளைமாக்சுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.