பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் துரத்தியடிக்கிறார்கள்.
இதனால் இனி கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தியேட்டர் கேன்டீன்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தியேட்டர் அதிபர் சங்கமும் எடுக்க இருக்கிறது. சங்கத்தின் முடிவுக்கு முன்பே மதுரை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு குளிர்பானங்களை விற்கத் தொடங்கி விட்டனர். விரைவில் கூட இருக்கும் தியேட்டர் அதிகபர்கள் சங்க செயற்குழுவில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.