அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
புதுமுகங்கள் இணைந்து 465 என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். "465 என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவின் கீழ் வரும் தண்டனைகள் எந்த குற்றத்திற்கு உரியது. அந்த குற்றங்கள் எப்படி நிகழ்கிறது. அதற்கு பின்னணி என்ன என்பதை காரண காரியங்களோடு சொல்லும் திகில் படம் இது" என்கிறார் இயக்குனரும் ஹீரோவுமான சாய் சத்யம்.
இதில் சாய் சத்யம் ஜோடியாக புதுமுகம் நிரஞ்சனா நடிக்கிறார். இவர்கள் தவிர கார்த்திக்ராஜ், மனோபாலா, கிரேன் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிலிப்.ஆர்.சுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். சஷாங் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். எல்.பி.எஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.