Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நியாயம்' சொல்லும் நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா எதிர்ப்பு

28 நவ, 2016 - 02:53 IST
எழுத்தின் அளவு:
Sripriya-oppose-TV-Programs-likes-truth-programs
Advertisement

விஜய் டிவியில் ஒரு காலத்தில் சீனியர் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியின் பல 'காப்பி' வடிங்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாக மாறியுள்ளன. சீனியர் ஹீரோயின்களான குஷ்பு, கீதா, ரோஜா, ஊர்வசி போன்றவர்கள் அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக இருக்கிறார்கள். இதற்கு முன் சில பெயர்களில் தமிழில் வந்த நிகழ்ச்சிகள் தற்போது 'சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள்', என பிரபல தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. ஏழை மக்களின் குடும்பப் பிரச்சனைகளை மட்டுமே அவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்றும் அதற்கென்று கோர்ட், நீதிபதி ஆகியோர் இருக்கும் போது தொலைக்காட்சிகள் எப்படி இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.


சமீபத்தில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கிண்டலடித்து வைக்கப்பட்ட எழுந்த காட்சியால், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடைசியில் அவரையே டிவிட்டரை விட்டு ஓட வைத்துவிட்டார்கள். அவர் இப்போது யாரிடம் போய் நியாயம் கேட்பார் என்பது தெரியவில்லை.


இதனிடையே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ள சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.


“கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை என்றால் அவற்றைத் தீர்த்து வைக்க குடும்ப நீதிமன்றங்கள் இருக்கின்றன. கிரிமினல் பிரச்சனை என்றால் சட்டத்தின் பல பிரிவுகள் இருக்கின்றன. நாம், நடிகர், நடிகைகள் டிவி நிகழ்ச்சிகளில் உட்கார்ந்து கொண்டு அடுத்தவர்களின் பிரச்சனைகளையும், வலிகளையும் பற்றி தீர்வு சொல்வதைப் பார்க்கும் போது களைத்துப் போகிறது. நாம் இதை நிறுத்தி விடலாமா... நாம் கற்றுக் கொண்ட கையளவு விஷயங்களை வைத்து கலைகள் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் தீர்வு சொல்வோமே...அப்படியே தீர்வு சொல்ல இது சரியான மேடை என நினைத்தால் கேமிரா இல்லாமல் சொல்லலாமே. நல்ல வக்கீலிடமோ, கவுன்சிலிங் செய்பவர்களிடமோ அவர்களை அழைத்துச் செல்லாமோ,” எனக் கூறியிருக்கிறார்.


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எதற்காக என அந்தக் கால 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சி உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான டிவி மீடியாவில் அனுபவம் வாய்ந்த சந்திரா பாரதியிடம் இது பற்றி கேட்ட போது, “இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் 'இது கோர்ட்டுமல்ல, இங்கு சொல்லப்படுவது தீர்ப்புமல்ல. சக மனிதர்களுக்கு தங்களுடைய பிரச்சனைகளைப் பற்றி சொல்லி, அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாக' மட்டுமே நடத்த வேண்டும். சட்டத்தின் வழியில் குறுக்கிடுவதோ, தீர்ப்பு சொல்வதே இந்த நிகழ்ச்சிகளுக்கான நோக்கமில்லை. மற்றவர்கள் வாழ்க்கையில என்ன மாதிரி பிரச்சனை இருக்கு, அப்படி ஒரு பிரச்சனை நம்ம வாழ்க்கையில வந்தால் நாம எப்படி சமாளிச்சிக்கணும் என்பதை மத்தவங்களும் தெரிஞ்சிக்கணும்கறதுக்காக நடத்தப்படற நிகழ்ச்சியாதான் இருக்கணும். இதைதான் சட்டத் தீர்வு மாதிரி எடுத்துக்கக் கூடாது. சில சமயங்களில் வரம்பு மீறல் நடக்கிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.


குடும்பப் பிரச்சனைகளையும் தாண்டி, பொதுப் பிரச்சனைகள், மருத்துவம் சம்பந்தமான பிரச்சனைகள், சமூகப் புறக்கணிப்பு போன்ற பல பிரச்சனைகள் இருக்கு. அது மூலமா மக்கள் கிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தெலுங்குல இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வரம்பு மீறி நடக்குது, அதுக்கு தொலைக்காட்சிகளும் ஒரு காரணம். ஆனால், தமிழ்த் தொலைக்காட்சிகள் கிட்ட முதிர்வான அணுகுமுறை இருக்கு. நம்ம ரசிகர்களையும் அவ்வளவு சுலபமா ஏமாத்திட முடியாது. அவங்க யாரு இதைப் பத்தியெல்லாம் தீர்ப்பு சொல்லன்னு கேள்வி எழுப்புவாங்க.


சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளுடன் நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அவர்களுடன் ஒருவராக தங்களது அணுகுமுறையைக் கடைபிடித்தால் இந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடமும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பிருக்கும்,” என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in