விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 24 சங்கங்கள் உள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சிக்கு தேர்தல் நடக்கும், 24 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் வாக்களித்து பெப்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
தற்போது ஜி.சிவா தலைவராகவும், கே.ஆர்.செல்வராஜ் செயலாளராகவும் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ந் தேதியுடன் முடிந்துவிட்டது. சங்க விதிகளின்படி பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் அறிவித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பதவி காலம் முடிந்த உடன் அவர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை பெப்சி தேர்தல் பற்றி அறிவிக்கவில்லை. இதுகுறித்து பெப்சிக்கு உட்பட்ட தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் சங்கம் பெப்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் "நிர்வாகிகள் பதவிகாலம் முடிந்தும் தேர்தல் நடத்தப்பாடாதது ஏன்?. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கத்துக்கும் தகவல் தெரிவிக்காதது ஏன்? சங்க விதிகளுக்கு முரணாக நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகித்து வருவது ஏன்? எனவே தேர்தலை உடனடியாக நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளது.