ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
சமூக வலைதளமான, டுவிட்டர் வாயிலாக பாலியல் தொல்லை தரும், மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போலீசில் நடிகை ஸ்ருதி புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கமலஹாசன் - சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதி; நடிகை. தமிழில் ஏழாம் அறிவு உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். அவர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரவீன் ஆண்டனி என்பவர் அளித்துள்ள புகார்: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி. பாடகர், இசை அமைப்பாளர் என்றும் அறியப்பட்டவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர், சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதி மீது அவதுாறு பரப்பும் வகையிலான படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அத்துடன், மன ரீதியாக ஸ்ருதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஸ்ருதியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும், குருபிரசாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.