புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சமூக வலைதளமான, டுவிட்டர் வாயிலாக பாலியல் தொல்லை தரும், மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போலீசில் நடிகை ஸ்ருதி புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கமலஹாசன் - சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதி; நடிகை. தமிழில் ஏழாம் அறிவு உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். அவர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரவீன் ஆண்டனி என்பவர் அளித்துள்ள புகார்: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி. பாடகர், இசை அமைப்பாளர் என்றும் அறியப்பட்டவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர், சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதி மீது அவதுாறு பரப்பும் வகையிலான படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அத்துடன், மன ரீதியாக ஸ்ருதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஸ்ருதியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும், குருபிரசாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.