சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
விஜய் ஹீரோவாக நடிப்பதாக இருந்தால், நான் டைரக்டர் ஆகி படம் இயக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் விஷால் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராகத்தான் சினிமாவில் பணியாற்றி வந்தார். இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை ஹீரோவாக்கி, அடுத்தடுத்து வெற்றியையும் கொடுத்ததால் தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்ததில் இருந்து விஷாலின் மாஸ் ரொம்பவே கூடிவிட்டது.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தனது டைரக்டர் ஆசை பற்றி கூறியிருக்கிறார். விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் டைரக்டர் ஆக ரெடி என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் விஷால்.