விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
தமிழ்த் திரையுலகத்தில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு விழாவிற்கும் கலந்து கொள்ள மாட்டார்கள். யாருக்காவது எப்போதாவது தோன்றினால் அது பற்றி விழா நடந்து கொண்டிருக்கும் மேடையிலேயே பேசுவார்கள். அதோடு, இனி விழாக்களுக்கு வராத அந்த ஹீரோயின்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்வார்கள். ஆனால், இதுவரை அப்படி யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாக சரித்திரம் இல்லை.
நயன்தாரா இதுவரை தான் நடித்த படங்களின் விழாக்களுக்கு வந்ததேயில்லை. படத்திற்கான ஒப்பந்தம் போடும் போதே அதையும் குறிப்பிட்டேதான் அவர் ஒப்பந்தம் போடுவது வழக்கம் என்கிறார்கள். ஆனால், நயன்தாரா அவர் நடிக்காத ஒரு படத்தின் விழாவிற்கு ஒரு முறை வந்திருக்கிறார். அவர் மட்டுமல்ல கூடவே த்ரிஷாவும் அந்த விழாவில் கலந்து கொண்டார். அதுவும் அந்தப் படத்தைத் தயாரித்த ஆர்யாவுக்காக கலந்து கொண்டார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற 'அமரகாவியம்' படத்தின் இசை வெளியீட்டு விழா அது.
நேற்று நடைபெற்ற 'காஷ்மோரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நயன்தாரா வழக்கம் போல வரவில்லை. அவர் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு அவர் வராததற்கு முக்கிய காரணம் இருக்கிறதாம். அப்படி அவர் கலந்து கொண்டால் அந்தப் படங்கள் ஓடாதாம், அதனால்தான் அவர் கலந்து கொள்வதை தவிர்க்கிறார் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அமரகாவியம்' பட விழாவிற்கு ஏன் வந்தார். ஓ...அதனால்தான் அந்தப் படம் தோற்றுவிட்டதோ...?. வராததற்கு என்னவெல்லாம் சென்டிமென்ட் சொல்கிறார்கள்.