Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கும், மக்களுக்கும் பாலமாக உள்ளனர் : சொல்கிறார் சிவகார்த்திகேயன்

23 அக், 2016 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-praises-media-persons

பத்திரிகையாளர்கள், எங்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்கின்றனர், என, சினிமா பத்திரிகையாளர்கள் சங்க, தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் பேசினார்.

சென்னை வடபழனியில், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், முதலாமாண்டு தீபாவளி மலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில், தயாரிப்பாளர் தாணு தலைமை தாங்க, மலரை ஒளிப்பதிவாளர், பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.


தாணு பேசுகையில், 100 பக்கமாக உள்ள இந்த தீபாவளி மலர், எதிர்காலத்தில், 1,000 பக்கமாக மாறும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்பாம், என்றார்.


சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஒரு பெண் தலைவராக உள்ள, இந்த சங்கத்தில் நிறைய நல்ல விஷயம் செய்கின்றனர்; வாழ்த்துக்கள். எங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்து சென்று, மக்களுக்கும், எங்களுக்கும் பத்திரிகையாளர்கள் பாலமாக இருக்கின்றனர். இன்று, கபாலி, தெறி படங்களுக்கு பிறகு, ரெமோ படம் வசூலில் வெற்றி பெற்றுள்ளதாக சொல்கின்றனர்; சந்தோஷமாக உள்ளது. இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டோம். தவறுகளையும் சுட்டி காட்டியுள்ளீர்கள். அடுத்தடுத்த படங்களில் அதை சரி செய்வோம். ரஜினி போன் செய்து வாழ்த்தியது, தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த வெற்றி என் ஒருவனால் வந்தது அல்ல. எல்லோருக்கும் பிடித்த படமாக தந்து, இந்த பெயரை காப்பாற்ற முயற்சிப்பேன். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில், சங்க தலைவர் கவிதா, செயலர் கிருஷ்ணன் குட்டி,பொருளாளர் பாலேஷ்வர், இயக்குனர்கள் பொன்ராம், விஜய் மில்டன், பாடலாசிரியர் உமாதேவி, நடிகர் சிரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)