புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வரும் நயன்தாரா, மாயா, டோரா படங்களுக்குப்பிறகு மீஞ்சூர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத படத்தில் கலெக்டராக நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் தண்ணீர் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பொது மக்கள் பிரச்சினை தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த கலெக்டராக நடித்துள் ளார் நயன்தாரா.
மேலும், இந்த படத்தின கதை ஒரே நாளில் நடப்பது போல் படமாக்கப்பட்டி ருக்கிறது. முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக நடித்த அர்ஜூன், அந்த ஒருநாளில் மக்களுக்கு எந்தமாதிரியான சேவைகளை செய்தாரோ அதேபோல் இந்த படத்தில் ஒரு மாவட்ட கலெக்டராக ஒரேநாளில் நயன்தாரா என்னென்ன மக்கள் சேவை செய்கிறார் என்பதை மையப்படுத்திதான் இந்த படத்தை கோபி இயக்கியிருக்கிறார். டோரா படத்தில் நடித்துக்கொண்டே இந்த படத்திலும் சத்தமில்லாமல் நடித்து வந்த நயன்தாரா தனக்கான போர்ஷனை முடித்துக்கொடுத்து விட்டார்.