சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பொதுவாக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பர படம் எடுப்பார்கள், அல்லது பிரச்சார படம் எடுப்பார்கள். ஆனால் அரசு திட்டத்தை பிரச்சாரம் செய்ய ஒரு திரைப்படமே எடுக்கப்பட்டது.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பெண் சிசுக்கள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவதை தடுக்க தொட்டில் குழந்தை என்ற திட்டம் துவக்கப்பட்டது. குழந்தை பெற்றவர்கள் அந்த குழந்தை வேண்டாம் என்றால் அதை கொல்லாமல் அரசு அமைத்திருக்கும் தொட்டிலில் போட்டுவிட்டால் அதனை அரசாங்கமே எடுத்து வளர்க்கும் என்பது அந்த திட்டம்.
இந்த திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்த விரும்பிய அமைச்சர் ஒருவர் தனது நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமனிடம் தொட்டில் குழந்தை திட்டத்தை கதை கருவாக கொண்டு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது திரைப்படம் இயக்குவதை நிறுத்தி விட்டு எஸ்.பி.முத்துராமன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நாள் நண்பர் ரகுபதிக்காக மீண்டும் படம் இயக்க முடிவு செய்தார்.
தொட்டில் குழந்தையை மையப்படுத்தி பஞ்சு அருணாசலம் கதை எழுதினார். பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருபெண் குழந்தை அரசு தொட்டிலில் போடப்படுகிறது. அந்த குழந்தை அரசின் பராமரிப்பில் வளர்ந்து ஒரு போலீஸ் அதிகாரியாக மாறி எப்படி இந்த சமுதாயத்துக்கு தொண்டாற்றுகிறது என்பதுதான் கதை.
தொட்டில் குழந்தை ராணியாக ரஞ்சிதா நடித்தார். ஹீரோவாகவும் ரஞ்சிதாவின் காதலனாகவும், மாவட்ட கலெக்டராகவும் ராம்கி நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் தொல்லை கொடுக்கும் வில்லன்களாக ஆனந்தராஜும், கரணும் நடித்திருந்தார்கள். ஆதித்யன் இசை அமைத்திருந்தார், டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மீனா மூவீஸ் சார்பில் வா.வடுகநாதனும், வலம்புரி முத்துவும் இணைந்து தயாரித்திருந்தார்கள். 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றிபெறவில்லை. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கடைசி படமும் இது தான்.