சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குநர் ஷங்கருக்கு மலையாள நடிகர்கள் மீது எப்போதுமே தனி மரியாதை. தன்னுடைய படங்களில் மலையாளப்பட நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்தில் கலாபவன் மணி நடித்திருந்தார். அடுத்து அவர் இயக்கிய 'ஐ' படத்தில் சுரேஷ் கோபியை நடிக்க வைத்திருந்தார். இதற்கு முன் ஷங்கர் இயக்கிய பெரும்பாலான படங்களிலும் வேறு சில மலையாள நடிகர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஷங்கரின் இந்த வித்தியாசமான சென்டிமென்ட் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்திலும் தொடர்கிறது. இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக மலையாள நடிகர் 'கலாபவன்' ஷாஜோனை ஒப்பந்தம் செய்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை போலீசில் சிக்க வைக்க துடிக்கும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தவர் ஷாஜோன். 'பாபநாசம்' படத்தில் 'கலாபவன்' மணி எற்று நடித்தாரே அதே வேடம்தான். ஷாஜோன். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ஷங்கரின் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஷங்கர் இப்போது பரபரப்பாக இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். விரைவில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை படமாக திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.