மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஒரு தலைராகம் ரவீந்தரை நினைவிருக்கிறதா? சுருள் தலைமுடி, வித்தியாசமான வசன உச்சரிப்பு, பிரமாதமான நடனம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். ஒரு தலை ராகத்திற்கு பிறகு சகலகலாவல்லவனினில் கமலுக்கு வில்லனாகவும், தங்க மகனில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அனல் காற்று, எச்சில் இரவுகள், பொய்கால் குதிரை, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் நடித்த 6.2 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இரும்பு, சிமெண்ட் வியாபாரத்தின் மூலம் தொழிலதிபர் ஆனார். கேரளாவின் முன்னணி கட்டிட நிறுவனங்களில் ரவீந்திருடையதும் ஒன்று. பல இடங்களில் பெட்ரோல் பங்க்கும் வைத்துள்ளார். தொழிலதிபரான ரவீந்தர் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு எந்தும் எப்பொழுதும் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினார். தற்போது படம் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்களுக்கென்று ஒரு அமைப்பு நடத்தி வருவது போன்று மலையாள குறும்பட இயக்குனர்களை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் கொச்சி மெட்ரோ மலையாளம் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். சிறந்த குறும்படம் இயக்கி உள்ள இயக்குனர்களுக்கு தனது தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு வழங்க இருக்கிறார். ஆனால் மீண்டும் நடிப்பது பற்றி அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.