முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' |

ஒரு தலைராகம் ரவீந்தரை நினைவிருக்கிறதா? சுருள் தலைமுடி, வித்தியாசமான வசன உச்சரிப்பு, பிரமாதமான நடனம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். ஒரு தலை ராகத்திற்கு பிறகு சகலகலாவல்லவனினில் கமலுக்கு வில்லனாகவும், தங்க மகனில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அனல் காற்று, எச்சில் இரவுகள், பொய்கால் குதிரை, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் நடித்த 6.2 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இரும்பு, சிமெண்ட் வியாபாரத்தின் மூலம் தொழிலதிபர் ஆனார். கேரளாவின் முன்னணி கட்டிட நிறுவனங்களில் ரவீந்திருடையதும் ஒன்று. பல இடங்களில் பெட்ரோல் பங்க்கும் வைத்துள்ளார். தொழிலதிபரான ரவீந்தர் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு எந்தும் எப்பொழுதும் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினார். தற்போது படம் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்களுக்கென்று ஒரு அமைப்பு நடத்தி வருவது போன்று மலையாள குறும்பட இயக்குனர்களை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் கொச்சி மெட்ரோ மலையாளம் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். சிறந்த குறும்படம் இயக்கி உள்ள இயக்குனர்களுக்கு தனது தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு வழங்க இருக்கிறார். ஆனால் மீண்டும் நடிப்பது பற்றி அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.




