புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான புறம்போக்கு படத்தில் மெரினா பீச்சுல -என்ற பாடலுக்கு நடனம் அமைத்தவர் மாரி மாஸ்டர். அந்த பாடலில் நடனமாடியவர் சுரேஷ் மாஸ்டர். பின்னர், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்திலும் சங்கி மங்கி -என்ற பாடலில் நடனமாடிய அவர், தற்போது ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்திலும் ஒரு பாடலில் ஷோலோ நடனமாடியிருக்கிறார்.
மேலும், ஏற்கனவே பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய சுரேஷ் மாஸ்டர், தற்போது அட்டி, கககபோ, கட்டம் போட்ட சட்டை, பட்டதாரி, ஆரம்பமே அட்டகாசம், பேய் இருக்கா இல்லையா உள்பட பல படங்களுக்கு பிசியாக நடனம் அமைத்து வருகிறார். இதில், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள அட்டி படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அந்த படமும், பாடல்களும் பெரிய அளவில் பிரபலமாகி தன்னை இன்னும் பிசியான டான்ஸ் மாஸ்டராக உயர்த்தும் என்று எதிர்பார்க்கிறார் அவர்.
அவர் மேலும் கூறுகையில், நடனத்தில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தேன். அதோடு எனக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொண்டு நடனம் அமைத்து வருகிறேன். அந்த வகையில், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள அட்லி படத்தில் முதலில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கத்தான் என்னை அழைத்தனர். ஆனால் நான் கொடுத்த நடன அசைவுகள் இயக்கு னருக்கு பிடித்து விட, படத்தின் அனைத்து பாடல்களுக்கும் என்னையே டான்ஸ் மாஸ்டராக்கி விட்டார். அது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்தது.
அதோடு, மா.கா.பா.ஆனந்தை இந்த படத்தில் நன்றாக நடனமாட வைத்திருக்கிறேன். முக்கியமாக, சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு அவர் நடனமாடியுள்ளார். இதுவரை மா.கா.பா.ஆனந்த் பேச்சில் வல்லவர் என்று கூறி வந்தவர்கள், இந்த படத்திற்கு பிறகு அவர் நடனத்திலும் வல்லவர் என்று சொல்வார்கள் என்கிறார் சுரேஷ் மாஸ்டர்.