புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என வரிசையாக மூன்று படங்களில் நடித்தவர்கள் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய இருவரும். இதில் அந்த படங்களோடு கோலிவுட்டை விட்டு காணாமல் போய் விட்டார் பூஜாகுமார். ஆனால் ஆண்ட்ரியா, அதன்பிறகு ராம் இயக்கிய தரமணி படத்தில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு ஆங்கில பாடலைகூட தானே எழுதி டியூன் போட்டு பின்னணியும் பாடினார். ஆனால் அந்த அளவுகு ஆண்ட்ரியா ஆர்வமுடன் கமிட்டான தரமணி படம் இன்னமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்த ஆண்ட்ரியா இப்போது அந்த கொள்கையில் இருந்து விடு பட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் கமிட்டாகியிருக்கிறார். முழுக்க முழுக்க வடசென்னை மனிதர்களாக தனுஷ், சமந்தா உள்பட பலர் வாழ்ந்து காட்டயிருக்கும் அப்படம் ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒரு விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். இந்த வேடம் ஆண்ட்ரியாவை பெரிய பர்பாமென்ஸ் நடிகையாக உயர்த்தும் என்கிறார்கள்.