செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |
பொன்னர் சங்கர் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் ஒரு சில குறைகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படியொரு பிராமாண்ட படத்தை கொடுத்த தியாகராஜன் பாராட்டு மழையில் நனைந்தபோதிலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் சில திருத்தங்களை செய்ய முன்வந்திருக்கிறார். படத்தை பார்த்த சில திரையுலக விஐபிக்கள் முக்கியமாக ஒரேயொரு குறையை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதாவது குஷ்புவும், ஜெயராமும் இறந்த பின்னர் தனது பெற்றோர் இறந்து விட்டதை பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடையாதது பற்றி விமர்சித்திருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவர்கள் மரணம் குறி்தது ஒரு டயலாக்காவது பேசியிருக்கலாம் என்றும் விமர்சனம் வந்துள்ளது. இதையடுத்து அந்த காட்சியை மட்டும் மீண்டும் படம்பிடித்து படத்தில் இணைக்க முடிவு செய்த தியாகராஜன், இதற்கான சூட்டிங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.