Advertisement

சிறப்புச்செய்திகள்

கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்'

22 ஜன, 2026 - 08:02 IST
எழுத்தின் அளவு:
Y-Not-Studios-held-a-small-actor-in-arrears-of-salary
Advertisement

'தமிழ்ப் படம் 1, 2' காதலில் சொதப்புவது எப்படி, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம், தலைக்கூத்தல், டெஸ்ட்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த நிறுவனம் ஒய் நாட் ஸ்டுடியோஸ். இதில் 'மண்டேலா' படம் சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனம் ஆகிய இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

தேசிய விருதுகளை வென்ற ஒரு முன்னணி நிறுவனம் ஒரு சிறிய நடிகருக்கு, அவர்களது படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாகத் தராமல் பாக்கி வைத்துள்ளது. தனியார் டிவியில் பல வருடங்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் விஜயசாரதி. அந்தக் கால நடிகர் மறைந்த சசிகுமார் மகன். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் வெளிவந்த 'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் விஜயசாரதி. அவர் நேற்று எக்ஸ் தளத்தில், “டியர் சஷிகாந்த் சார், அனைத்தும் நன்றாக நடக்கிறது என எதிர்பார்க்கிறேன். 'சிற்றூர் டேஸ்'-ல் நடித்துள்ளேன். அதற்கான டப்பிங் பேச வேண்டும். உங்கள் நிர்வாகத் தயாரிப்பாளர் மிஸ்டர் பிரகாஷைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது போனையும் அவர் எடுப்பதில்லை. எனக்குத் தர வேண்டிய பாக்கித் தொகையைத் தருவதற்காக யாரையாவது ஒருவரை என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். சோஷியல் மீடியாவில் இதைக் கேட்பதற்கு மன்னிக்க” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு அவர் இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மூன்று மாதங்களாக ஒய் நாட்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சஷிகாந்த் எக்ஸ் தளத்தில் எந்தப் பதிவும் போடவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் ... ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap