சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து தனது புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டார் மணிரத்னம். பின்னர், பருத்தி வீரன் கார்த்தி, துல்கர்சல்மான், நித்யாமேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து இயக்கயிருந்தார். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திற்கு மலையாள நடிகர் துல்கர்சல்மான் எதற்கு என்று அவரை நீக்கி விட்டார். விளைவு, அவருக்கு பதிலாக பிரபல தெலுங்கு நடிகரான நானியை புக் பண்ணியுள்ளார். ஆக, கார்த்தி, நானி, நித்யாமேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் அப்படம் உருவாவதாக இருந்தது. ஆனால், இப்போது அந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி விட்டார்.
அதற்கான காரணம் குறித்து கீர்த்தி சுரேஷை கேட்டபோது, மணிரத்னம் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தபோது நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அதனால் அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுத்தேன். ஆனால் அந்த படம் குறித்தபடி நடைபெறவில்லை. துல்கர் சல்மானை நீக்கி விட்டு நானி வந்த பிறகு டேட்ஸ் மாறி விட்டது. அதனால் என்னிடம் வேறு தேதியில் கால்சீட் கேட்டனர். அவர்கள் கேட்ட தேதியில் நான் வேறு தெலுங்கு படத்தில் நடிக்கயிருப்பதால் வேறு வழியில்லாமல் அந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். என்றாலும் மணிரத்னம் படத்தில் கமிட்டாகி வெளியேறுவது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.