விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
சிவகார்த்திகேயன் எப்படி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்குள் வந்தாரோ அதேபோன்று அதே விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாகி, ''வானவராயன் வல்லவராயன்'' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மா.கா.பா.ஆனந்த். முதல் படம் வெளியான நிலையில், தற்போது அவர் கைவசம் பஞ்சு மிட்டாய், அட்டி, நவரச திலகம் உள்பட 4 படங்கள் உள்ளன.
இதில் நவரச திலகம் விரைவில் வெளியாகயிருக்கிறது. இந்த படத்தில் மா.கா.பாவுடன் இணைந்து கருணாகரனும் நடித்துள்ளார். இந்த படங்களுக்காக கடந்த 4 மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்பில் இருந்ததால் புதிய படங்களுக்கான கதை கேட்பதை தற்காலிமாக நிறுத்தி வைத்திருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். இந்தநிலையில, அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயனும், மா.கா.பா.ஆனந்தும் இணைந்து நடிக்கும் தல தளபதி என்றொரு படம் தயாராகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி மா.கா.பா.ஆனந்தை கேட்டால், என்னது நான் சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறேனா? எனக்கே தெரியாம இப்படியொரு செய்தி ஓடிக்கிட்டிருக்கிறதா? என்று பலத்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். மேலும், சிவகார்த்திகேயன் எனது நண்பர் தான். அவருடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் சந்தோசமே. ஆனால் இப்படியொரு படத்துக்காக இதுவரை யாரும் என்னை அணுகியதில்லை. யாரோ இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.