சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
"பொதுவாக கிருமி மனிதனுக்கு தீங்கு செய்யும். ஆனால் கிருமி படம் எனக்கு நன்மை செய்திருக்கிறது" என்கிறார் கதிர். அவர் மேலும் கூறியதாவது: மதயானைகூட்டம் படத்துக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டது உண்மை. நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் எல்லாமே சிறிய படங்கள். அல்லது எனக்கு பொருந்தாத கதைகள். எப்போதுமே முதல் படம் வெற்றியோ தோல்வியோ இரண்டாவது படம் மிகவும் முக்கியமானது. அதனால் நல்ல கதைக்காக சில வருடங்கள் காத்திருந்தேன். அப்போதுதான் நண்பர்கள் மூலம் கிருமி வாய்ப்பு வந்தது. கதையை கேட்ட உடனேய ஒப்புக் கொண்டேன். கிருமி படப்பிடிப்பு நடந்த நாட்கள் குறைவுதான் அதற்கு பிறகான பணிக்கு நிறைய நேரம் ஆனது. தினமும் தயாரிப்பாளர் ஆபீசுக்கு போய் என்னால் முடிந்த உதவிகளையும் செய்தேன்.
இப்போது என் நடிப்பை மற்றவர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கும் தீமை செய்யும் கிருமி எனக்கு நன்மை செய்திருக்கிறது என்று நண்பர்கள் கிண்டலாக சொல்கிறார்கள். அடுத்து என்னோடு விளையாடு படத்தில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார். பரத்தும் நடிக்கிறார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன். என்கிறார் கதிர்.