Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு எப்போதுமே கவுண்டமணிதான் குருநாதர்! -செந்தில்

27 செப், 2015 - 04:05 IST
எழுத்தின் அளவு:
Always-Goundamani-is-my-Guru-says-comedian-Senthil

கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவர்கள். கவுண்டமணியின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் செந்திலுடன் 25 ஆண்டுகளாக நடித்தார். அப்படி அவர்கள் காமெடியன்களாக நடித்த காலகட்டத்தில் அவர்களுக்கான காமெடி ட்ரேக் எழுதியவர்கள் வீரப்பன் உள்ளிட்ட சில காமெடி ரைட்டர்கள் இருந்தனர். அந்த வகையில், டைரக்டர்கள் ஒரு பக்கம் கதை எழுதினாலும், இவர்களுக்கான காமெடி எழுதவும் ரைட்டர்கள் உருவாக்கப்பட்டனர்.

அப்படி கவுண்டமணி-செந்தில் இருவரும் கூட்டணி அமைத்த பெருவாரியான காமெடி காட்சிகளில் செந்திலை கவுண்டமணி அடிப்பது, மிதிப்பது போன்ற காமெடிகளும், கவுண்டமணியை செந்தில் மற்றவர்களிடம் மாட்டி விடுவது போன்ற காமெடி காட்சிகளும்தான் அதிகமாக இருந்தது. அந்த காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் இருந்தன.


இந்த நிலையில், வடிவேலுவின் மார்க்கெட் சூடுபிடித்த பிறகு அவர்களது மார்க்கெட் டல்லடித்தது. அதனால் பின்னர் அவர்களின் கூட்டணியும் உடைந்தது. இப்போதும் கவுண்டமணி-செந்தில் இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். கவுண்டமணி நாயகனாக நடித்த 49ஓ வெளியாகியிருக்கும் நிலையில், செந்தில் நிழல் உலக தாதாவாக நடித்துள்ள திருட்டு விசிடி படமும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எனது குருநாதர் கவுண்டமணி என்று செந்தில் கூறும்படியான காட்சியும் உள்ளது.


இதுபற்றி செந்திலைக்கேட்டால், நான் சினிமாவுக்காக அப்படி சொல்லவில்லை. கவுண்டமணி எப்போதுமே எனது குருநாதர்தான். அவருடன் நான் நடித்த காலங்கள் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டவன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)