சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
உலக அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் ஏஞ்சலினா ஜோலி. ஹாலிவுட் நடிகையான இவர், ஐநா சபையில் அகதிகளுக்கான பாதுகாப்பு தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதனால், பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடந்தால் உடனே தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், ஈராக், சிரியா நாடுகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை செக்ஸ் அடிமைகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு வன்கொடுமை செயலாகும். இதற்கு பயந்து ஏராளமான குடும்பங்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகிறார்கள். இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதோடு, பாலியல் பலாத்காரத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளை அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க முன்வரவேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஏஞ்சலினா ஜோலி அழைப்பு விடுத்துள்ளார்.