Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திசை மாறிய லிங்கா விவகாரம்... சிக்கலில் விஷால்....

11 செப், 2015 - 03:02 IST
எழுத்தின் அளவு:
Vishal-in-ew-hurdle

லிங்கா நஷ்டஈடு தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கும் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் இடையில் பிரச்சனை எற்பட்டது. இந்த விவகாரத்தில் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் வகையில் இனி படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என ஸ்டிரைக் அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம். அடுத்த சில நாட்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாயும் புலி படம் வெளியானது. அந்தப் படத்துக்கு ரெட் போடுவதாக சொல்லப்பட்ட செங்கல்பட்டு ஏரியாவிலும் பாயும் புலி பல தியேட்டர்களில் வெளியானது. என்ன அதிசயம் நடந்தது? ரகசியமாக நடைபெற்ற பேரமும், பெரும் தொகை கைமாறியதுதான் காரணம் என்கிறார்கள் படத்துறையினர். லிங்கா நஷ்டஈடாக தியேட்டர் அதிபர்கள் கேட்ட சில கோடிகளை வேந்தர் மூவிஸ் கொடுக்க மறுத்துவிட்டது.


இதனால் பாயும் புலி படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல்போய்விடுமோ என பதறிப்போன விஷால், அந்த பணத்தை தானே தருவதாக தியேட்டர் அதிபர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதாவது அந்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை உடனே தருவதாகவும், பாக்கியை பாயும் புலி வெளியாகி மூன்று நாட்கள் கழித்து அதாவது 06.09.2015 அன்று தருவதாகவும் சொல்லி இருக்கிறார் விஷால். அவர் சொன்ன டீலுக்கு தியேட்டர் அதிபர்கள் ஓகே சொன்ன அதன் பிறகே பாயும் புலி ரிலீஸ் ஆகி இருக்கிறது. விஷால் சொன்னபடியே திங்கள்கிழமை பாக்கி ரூபாயை வசூலிக்க ஒரு தியேட்டர் அதிபரை அனுப்பி வைத்துள்ளனர். பாயும்புலி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் அப்செட்டில் இருந்த விஷால், தன்னால் இப்போதைக்கு அப்பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக விஷாலின் அடுத்த படத்துக்கு இப்போதே சிக்கல் ஆரம்பமாகிவிட்டது...!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)