சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தொடர்ந்து சரக்கடிப்பது பற்றியே படம் எடுத்து வருவதால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறார் இயக்குநர் ராஜேஷ். அதிலும் குறிப்பாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிய பிறகு ராஜேஷ் மீதான விமர்சனம் மேலும் கடுமையாகிவிட்டது.
அது மட்டுமல்ல, டாஸ்மாக் டைரக்டர், குடிகார இயக்குநர் என்று அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணவும் தொடங்கியுள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ராஜேஷை வசைமாரிப் பொழிந்து வருகின்றனர்.
இதையெல்லாம் பார்த்து இயக்குநர் ராஜேஷ் நொந்து போய்விட்டாராம்.
எனக்கும் நல்ல ஆக்ஷன் படங்களையும், ஃபேமிலி சப்ஜெக்ட் படங்களையும் பண்ணத்தான் ஆசை. ஆனா நான் தேடிப்போற ஹீரோக்கள் எல்லாருமே உங்க ஸ்டைல் டாஸ்மாக், காமெடி ஸ்க்ரிப்ட் ஒண்ணு சொல்லுங்க என்றுதான் கேட்கிறார்கள். ஆர்யாவிடன் நான் முதலில் ஒரு ஆக்ஷன் கதையைத்தான் சொன்னேன். கேட்டுட்டு அப்புறம் இது உங்க கதை மாதிரி இல்லையே யாரோட கதைன்னு கிண்டலாகக் கேட்டார். இது என்னோட கதைதான்னு சொன்னாலும் அவர் நம்பவே இல்லை. அதனாலதான் நான் வேற வழியில்லாம காமெடிப்படம் எடுக்கிறேன். அதுக்காக படத்துல சரக்கடிக்கிற மாதிரியான சீன்களையும் அதிகமா வைக்க வேண்டியிருக்கு. இதுல என் தப்பு எங்க இருக்கு? என்று புலம்பி வருகிறார் ராஜேஷ்.