சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
மலையாளத்தில் கடந்த பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதும் வழக்கம். ஆனால், அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படமான 'வந்தே மாதரம்' வெளிவந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. அந்தப் படமும் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து வெளிவந்ததால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. லிங்குசாமி இயக்கிய முதல் படமான 'ஆனந்தம்' படம்தான் மம்முட்டி தமிழில் கடைசியாக நடித்து வெற்றி பெற்ற படம்.
மம்முட்டிக்கு தமிழில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் அவர் நடித்து நேரடியாக வெளிவந்த மலையாளப் படங்கள் கூட தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியதுண்டு. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். 'தரமணி' படத்திற்குப் பிறகு ராம் இயக்க உள்ள புதிய படத்தில் மம்முட்டிதான் கதாநாயகன். ஆன்ட்ரியா, அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.