சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தனது ரசிகர் மன்றங்கள் மூலம் இலவச திருமணம், கல்வி உதவித் தொகை என பலவிதத்திலும் உதவிகள் செய்து வருபவர் விஜய். ஆனால் தற்போது அவரது உதவும் மனப்பான்மை சினிமாத்துறைக்குள்ளும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், சிம்பு நடித்த வாலு படம் திரைக்கு வருவதற்காக பலதடவை அறிவிக்கப்பட்டு வெளிவர முடியாமல் சிக்கலில் சிக்கிக்கொண்டு கிடந்தது. அதை அறிந்து பலரும் அவருக்கு ஆறுதல் மட்டுமே சொல்லி வந்தனர். ஆனால் விஜய் மட்டும்தான், வாலு படத்தை ரிலீஸ் செய்வதற்கான உதவிகளை செய்ய முன்வந்தார்.
இந்த உதவியை விஜய்யிடமிருந்து எதிர்பார்க்காத சிம்பு, உருகிப்போனார். அதையடுத்து, விஜய் எனது உடன்பிறவாத அண்ணன் என்று குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதோடு, வாலு படத்திலும் விஜய்க்கு நன்றி தெரிவித்து கார்டு போட்டிருந்தார் சிம்பு. அதோடு, விஜய், சிம்புவுக்கு உதவி செய்திருக்கிறார் என்றதும் அவரது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு விசிட் அடித்து வாலு படத்துக்கு நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இந்த நிலையில், தனது சித்தி மகனான விக்ராந்தின் தாக்க தாக்க படத்திற்கும் உதவி செய்திருக்கிறார் விஜய். வியாபாரம் ஆகாமல் இருந்த அந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணுவிடம் சொல்லி வெளியிடுவதற்கு ஆவன செய்திருக்கிறார். அதனால் இன்று வெளியாகியுள்ள தாக்க தாக்க படத்திலும் விஜய்க்கு நன்றி கார்டு போட்டுள்ளார் விக்ராந்த். அது மட்டுமின்றி, இந்த படத்தில் விக்ராந்தின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாகவும் விஜய் கருத்து கூறியுள்ளார். அதனால் இந்த படத்திற்கும் விஜய் ரசிகர்கள் நல்லதொரு ஓப்பனிங் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார் விக்ராந்த்.