புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'புலி' படம் செப்டம்பர் 17 அன்று வெளியாவதாக இருந்தது. கிராபிக்ஸ் பணிகள் முடிவடையவில்லை என்பதால் பட ரிலீஸை செப்டம்பர் 17-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். புலி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் உற்சாகமடைந்த பல தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை களத்தில் இறக்குகின்றனர். எனவே செப்டம்பர் 17-ல் பல படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஏற்கனவே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் லிங்குசாமி உடன் மோதி வரும் ஞானவேல்ராஜா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தியேட்டர்களை புக் பண்ணி வருகிறார். உனக்கு என்ன வேணம் சொல்லு என்ற ஹாரர் படமும் இதே நாளில் திரைக்கு வருகிறது. இந்த படங்கள் தவிர கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள '49-ஒ' படத்தை செப்டம்பர்-17 அன்றே வெளியிடவிருப்பதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த 4 படங்களின் ரிலீஸ் உறுதியாகியுள்ள நிலையில் வேறு சில படங்களும் களத்தில் குதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.